Moorthy

Tamil Blog

Sunday, January 15, 2006

நானும் ஓர் மார்கண்டேயன்
------------------------------------------------

இனி...

என் கண்கள் நீர் வடிக்காது,
வாய் சுடுசொல் உறைக்காது

என் பார்வை என்றும் குறையாது,
குரல் குன்றாது, புத்தி மழுங்காது

நரை என்பதை என் தலை காணாது
வழுக்கையோ, வயோதிகமோ என்னை அண்ட முடியாது

நான் உயிர் விதைக்கப் போவதுமில்லை, வதைக்கப் போவதுமில்லை.

பணப்பேய் என்னை ஆட்டித்தள்ளாது
பற்றும், பாசமும் வாட்டித்தள்ளாது
பொறாமைத்தீ சுட்டெரிக்காது

என் மலமோ, நீரோ யாரும் துடைத்தள்ள வேண்டாம்

கை கால் முடங்கி, முதுகு கூனி
பரிதாபத்திற்கு ஆளாகது என் உடல்
என்று போகும் என்ற
காத்திருப்பிற்கு ஆளாகாது என் உயிர்

என் முகம் என்றும்
அன்று பூத்த மல்லிப்பூ

...

இது வரை என் ஜீவனம் சுக ஜீவனம்

எனக்காகச் சிந்தப்பட்ட
சில கண்ணீர்த்துளிகள் சொல்லின
என் வாழ்க்கை வரலாறு

நான் காலத்தில் உறைந்தவனானேன்
கவலைகளென்பது இனி எனக்கில்லை

- ஆர். விவேகானந்தன்

1 Comments:

  • At 11:38 AM, Blogger www.bogy.in said…

    தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

     

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது


Web Counter by TrafficFile.com